கண்ணன் லீலைகள் செய்வானே பாடல் வரிகள்

Movie Meera
படம் மீரா
Music S. V. Venkatraman
Lyricist Papanasam Sivan
Singers         M. S. Subbulakshmi
Year 1945
பெண் : கண்ணன் லீலைகள் செய்வானே
கண்ணன் லீலைகள் செய்வானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில் மணிவண்ணன் கண்ணன்
லீலைகள் செய்வானே
 
பெண் : கானக மடுவில் காளியன் தலையில்
களி நடம் புரியும் பாதன் ஆ…ஆ
கானக மடுவில் காளியன் தலையில்
களி நடம் புரியும் பாதன்
வானவர் வாழ மாநில மீது
ஆநிரை மேய்த்த என் நாதன்
கண்ணன் லீலைகள் செய்வானே
 
குழு : ஆயர் மனையில்
வெண்ணெய் திருடுவான்
அகமும் கவர்ந்திடுவானே
மாயப் புன்னகை செய்து மயக்கும்
மீராவின் பிரபு தானே
கண்ணன் லீலைகள் செய்வானே
 
பெண் : பிரேம நதியின் தீர மதனில்
மீராப் பிரபுவும் வருவான் ஆ…
பிரேம நதியின் தீர மதனில்
மீராப் பிரபுவும் வருவான்
திரு முக மதனில் குருநகை மலர
அகமும் புறமும் நிறைவான்
கண்ணன் லீலைகள் செய்வானே
 
ஆண் : வானம் அளந்தான்
காளை நினைந்தால்
மாயவினை அகலாதோ
 
குழு : கனி இதழ் ஊதும்
குழலிசை கேட்டால்
கல் மனமும் கரையாதோ
கண்ணன் லீலைகள் செய்வானே
 
ஆண் : மாலினைக் காண மாமுனி வோர்கள்
பாற்கடல் தேடியே வந்தார்
ஆலிலை மேலே துயில்கொள்ளும் அமுதைக்
காண்கிலம் என்று வியந்தார்
அமுதைக் காண்கிலம் என்று வியந்தார்
 
ஆண் மற்றும் குழு :
சங்கரன் வந்தான் இந்திரன் வந்தான்
சந்திர சூரியர் வந்தார்
அங்கு மிங்குமாய் ஐயனைத்தேடி
ஆயர் மனைதனில் கண்டார் தேடி
ஆயர் மனைதனில் கண்டார்
 
பெண் : மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான் பேதை
மீரா ஹ்ருதயம் தன்னில்
அடியாள் மீரா…ஆஆ… ஆ…ஆ…ஆ…ஆ…
 
அனைவரும் : மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான்…ஆ…
மீரா ஹ்ருதயம் கோவில் கொண்டான்
மீளா அடிமை கொண்டான்
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்
மாறாப் பிரேமை தந்தான்
 
அனைவரும் : கண்ணன் லீலைகள் செய்வானே
கண்ணன் மாயைகள் புரிவானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில் மணிவண்ணன்
கண்ணன் லீலைகள் செய்வானே
கண்ணன் மாயைகள் புரிவானே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *