சோலை மலரொளியோ உனது பாடல் வரிகள்

Movie Naam Iruvar
படம் நாம் இருவர்
Music R. Sudarsanam
Lyricist Mahakavi Subramanya Bharathiyaar
Singers         T. R. Mahalingam and
T. S. Bhagavathi
Year 1947
ஆண் : சோலை மலரொளியோ
சோலை மலரொளியோ உனது
சுந்தரப் புன்னகைதான்…..ஆ….ஆ….ஆ….ஆ….
சோலை மலரொளியோ உனது
சுந்தரப் புன்னகைதான்
நீலக் கடலலையே கண்ணம்மா
நீலக் கடலலையே கண்ணம்மா
நீலக் கடலலையே கண்ணம்மா உனது
நெஞ்சின் அலைகளடீ கண்ணம்மா
நெஞ்சின் அலைகளடீ கண்ணம்மா
 
பெண் : கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்
கண்ணன் அழகு முழுதில்லை
என் கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்
கண்ணன் அழகு முழுதில்லை
நண்ணும் முக வடிவை காணில்
நண்ணும் முக வடிவை காணில்
அந்த நல்ல மலர்ச் சிரிப்பை காணோம்…..
நண்ணும் முக வடிவை காணில்
அந்த நல்ல மலர்ச் சிரிப்பை காணோம்…..
என் கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்
கண்ணன் அழகு முழுதில்லை
 
ஆண் : வெண்ணிலவு நீயெனக்கு
மேவு கடல் நானுனக்கு
வெண்ணிலவு நீயெனக்கு
மேவு கடல் நானுனக்கு
பண்ணுசுதி நீயெனக்குப்
பாட்டினிமை நானுனக்கு
பண்ணுசுதி நீயெனக்குப்
பாட்டினிமை நானுனக்கு
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர்
ஆ……ஆ…..ஆ…..ஆ……ஆ……ஆ…..ஆ….
ஆ…ஆ……ஆ……ஆ……ஆ…..
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர்
எண்ணமிலை நின்சுவைக்கே
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர்
எண்ணமிலை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே
கட்டியமுதே கண்ணம்மா…..
கண்ணின் மணி போன்றவளே
கட்டியமுதே கண்ணம்மா…..
 
ஆண் : வெண்ணிலவு நீயெனக்கு
மேவு கடல் நானுனக்கு
வெண்ணிலவு நீயெனக்கு

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *