பணக்காரர் தேடுகிற இன்பம் பாடல் வரிகள்

Movie Paithiyakkaran
படம் பைத்தியக்காரன்
Music M. S. Gnanamani,
C. R. Subburaman
Lyricist Ambikapathi
Singers         N. S. Krishnan
Year 1947

ஆண் : பணக்காரர் தேடுகிற இன்பம்
ஏழைப் பாட்டாளி மக்கள் படும் துன்பம்
 
ஆண் : காசு பணம் கொண்டவர்க்குக்
கவலையில்லாத நேரம் ஏது
 
ஆண் : பணக்காரர் தேடுகிற இன்பம்
ஏழைப் பாட்டாளி மக்கள் படும் துன்பம்
 
ஆண் : குணத்தோடு பழகாத கூட்டம்
கூலி குறைத்துக் கொடுக்கப் போராட்டம்
குணத்தோடு பழகாத கூட்டம் கூலி
குறைத்துக் கொடுக்கப் போராட்டம்
செய்தும் குளம் வெட்டுவார்
மடம் கட்டுவார்
குளம் வெட்டுவார் மடம் கட்டுவார்
கடன் கொடுத்தே பின் வழக்காடி
அடுத்தோரைக் கெடுத்தாகும்
பணக்காரர் தேடுகிற இன்பம்
 
ஆண் : காசு பணம் கொண்டவர்க்குக்
கவலையில்லாத நேரம் ஏது
வெள்ளிக்காசு பணம் கொண்டவர்க்குக்
கவலையில்லாத நேரம் ஏது
அவர் கண்மூடித் தூங்கமுடியாது
அவர் கண்மூடித் தூங்கமுடியாது
பகல் காலத்திலே கொள்ளை லாபத்திலே
காருண்யம் தானின்றித் தேடிடும்
தங்கக் காசு பணம் கொண்டவர்க்குக்
கவலையில்லாத நேரம் ஏது
 
ஆண் : கூழையுண்ணும் ஏழை
மணிக்கேழு மயில் நடப்பான்
கொண்ட செல்வன் வண்டியேற
ரெண்டு பேரை அழைப்பான்
வேலை செய்யும் கூலி ஒரு நாழி
அன்னம் புசிப்பான்
ஆளை ஏய்க்கும் கோழை முதலாளி
சோற்றை வெறுப்பான்
 
ஆண் : காசு பணம் கொண்டவர்க்குக்
கவலையில்லாத நேரம் ஏது
 
ஆண் : காட்டைக் காக்கும் ஏழை
வீட்டுக்காரி உடம்பு
கட்டுமஸ்தும் கல்லுப்
போலிருக்கும் இரும்பு
வீட்டைக் காக்கும் செல்வனின்
பொண்டாட்டி உடம்பு
அது வெளியே சொல்லும்
விஷயமல்ல மெலிந்த துரும்பு
 
ஆண் : நாட்டைக் கெடுக்கும்
நவநாகரீகம் நாடுவார்
பூட்டி வைத்த ரொக்கத்தைக்
காட்டி உறவாடுவார்
பூட்டும் நகையாடைப் பொருளாலே
புகழ் தேடும்
 
ஆண் : காசு பணம் கொண்டவர்க்குக்
கவலையில்லாத நேரம் ஏது

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *