மண்ணையும் பொன்னையும் பாடல் வரிகள்

Movie Name  Nadodi Pattukkaran
திரைப்பட பெயர் நாடோடி பாட்டுக்காரன்
Music Ilayaraja
Lyricist Vaali
Singer S. P. Balasubrahmanyam and S. Janaki
Year 1992

குழு : மண்ணையும் பொன்னையும்
கொடுத்தவ யாரு
உன்னையும் என்னையும்
காப்பவ யாரு
அந்த ஆத்தவ தினம்
பாடுறது யாரு
பாமாலைக் கட்டிப்
போடுறது யாரு
ஊரெல்லாம் கொண்டாடும் ஆளு
அவன்தாண்டி இவனானு பாரு

குழு : மண்ணையும் பொன்னையும்
கொடுத்தவ யாரு
உன்னையும் என்னையும்
காப்பவ யாரு

ஆண் : சூடி கொடுத்த சுடர் கொடியே
எப்போதும் நான் உன் சொற்படியே
பெண் : பாடிக் கொடுத்த புதுக் கவியே
என் வீடு நாளும் உன் மடியே

ஆண் : கொய்யாம காத்தாடும்
கொய்யாவைப் போலாடும்
மானே பனி பூந்தேனே
பெண் : எந்நாளும் ராக்காலம்
நான் சூடும் பூக்கோலம்
கேட்கும் உன்னை எதிர் பார்க்கும்

ஆண் : வந்தேன் நான் எனை
தந்தேன் நான்
பெண் : புதுச் செந்தேன் தான்
உனைச் சேராதோ…

குழு : மண்ணையும் பொன்னையும்
கொடுத்தவ யாரு
உன்னையும் என்னையும்
காப்பவ யாரு

பெண் : பூ வச்ச பொண்ணு
ஒண்ணு நெனச்சாலே
பூமிக்கு அச்சமின்றி
முடிப்பாளே
யாராச்சும் முன்னே
வந்து தடுத்தாலே
பூகம்பம் போலே
பொங்கி அழிப்பாளே

பெண் : பூவைப்போல் பொண்ணிருப்பா
மதிச்சாலே
முள்ளைப்போல் மாறிடுவா
மொறைச்சாலே

பெண் : கடலுக்கு கரையைக்
கட்ட பார்க்காதே
தறிக்கெட்டு தவறிக்
கெட்டு பேசாதே

பெண் : மங்கம்மா ராணியைப்போல
எங்கம்மா பெத்துப் போட்டாளே
தெக்குசீமைப் பொண்ணு
அஞ்ச மாட்டா

பெண் : கொம்புத்தேன் உனக்கெதுக்கு
கிட்டாது முடவனுக்கு
ஒத்துக்கொள்ளு ஒத்தி நில்லு மாமா
சொன்னா இவ செஞ்சி முடிப்பா
சொன்னா இவ செஞ்சி முடிப்பா…….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Nadodi Pattukkaran, Nadodi Pattukkaran Songs Lyrics, Nadodi Pattukkaran Lyrics, Nadodi Pattukkaran Lyrics in Tamil, Nadodi Pattukkaran Tamil Lyrics, நாடோடி பாட்டுக்காரன், நாடோடி பாட்டுக்காரன் பாடல் வரிகள், நாடோடி பாட்டுக்காரன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *