மலருக்கு தென்றல் பாடல் வரிகள் 

Movie Name  Enga Veettu Pillai
திரைப்பட பெயர் எங்க வீட்டுப் பிள்ளை
Music M.S. Viswanathan
Lyricist Aalangudi Somu
Singer L. R. Eswari and P. Susheela
Year 1965

பெண் : வானகமே வையகமே
வளர்ந்து வரும் தாயினமே
ஆணுலக மேடையிலே
ஆசை நடை போடாதே ..
ஆசை நடை போடாதே

பெண் : மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

பெண் : பறவைக்குச் சிறகு பகையானால்
அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு
உறவுக்கு நெஞ்சே பகையானால்
மண்ணில் உயிரினம் பெருகிட வகை ஏது
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது

பெண் : மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

பெண் : படகுக்குத் துடுப்பு பகையானால்
அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு
கடலுக்கு நீரே பகையானால்
அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது

பெண் : மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

பெண் : கண்ணுக்குப் பார்வை பகையானால்
அது கருத்தால் உணர்ந்திட வழியுண்டு

பெண் : பெண்ணுக்குத் துணைவன் பகையானால்
அந்தப் பேதையின் வாழ்வில் ஒளி ஏது

பெண்கள் : மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

Tags: Enga Veettu Pillai, Enga Veettu Pillai Songs Lyrics, Enga Veettu Pillai Lyrics, Enga Veettu Pillai Lyrics in Tamil, Enga Veettu Pillai Tamil Lyrics, எங்க வீட்டுப் பிள்ளை, எங்க வீட்டுப் பிள்ளை பாடல் வரிகள், எங்க வீட்டுப் பிள்ளை வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *