நான் ஏரிக்கரை மேலிருந்து பாடல் வரிகள்

Movie Name  Chinna Thayee
திரைப்பட பெயர் சின்ன தாயி
Music Ilayaraja
Lyricist Vaali
Singer K.J. Yesudas and Swarnalatha
Year 1992

ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமுன்னு
தோணல

ஆண் : என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில

ஆண் : நான் உண்டான
ஆசைகள உள்ளார பூட்டி
வச்சி ஒத்தையில
வாடுறேனே இக்கரையில

பெண் : { நான் மாமரத்தின்
கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு
காத்திருந்தேன் காணல

பெண் : அட சாயங்காலம்
ஆன பின்னும் சந்தை மூடி
போன பின்னும் வீடு போயி
சேர்ந்திடத்தான் தோணல } (2)

பெண் : என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக‌ போக
வேணும் அக்கரையில

பெண் : நான் உண்டான
ஆசைகள உள்ளார பூட்டி
வச்சி திண்டாடி நிக்கிறேனே
இக்கரையில

ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமுன்னு
தோணல

ஆண் : தூரக் கிழக்கு
கரை ஓரம் தான் தாழப்
பறந்து வரும் மேகம் தான்

ஆண் : உன்கிட்ட சேராதோ
என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும்
சந்தர்ப்பம் வாராதோ

பெண் : உன் கூட நானும்
சேர ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு
சேதி ஒண்ணு சொன்னேனே

ஆண் : கண்ணாலம்
காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம்
தப்பாது

பெண் : நான் மா மரத்தின்
கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு
காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு
தோணல

பெண் : மாமன் நெனப்பில்
சின்னத் தாயிதான் மாசக்
கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா
மூச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர்
பொற்காலம் வாராதோ

ஆண் : கையேந்தும்
ஆட்டு குட்டி கன்னிப்
பெண்ணாய் மாறாதோ
மையேந்தும் கண்ணை
காட்டி மையல் தீர
பேசாதோ

பெண் : உன்னாலே
தூக்கம் போயாச்சு
உள்ளார ஏதேதோ
ஆயாச்சு

ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல

ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமுன்னு
தோணல

பெண் : என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக‌ போக
வேணும் அக்கரையில

பெண் : நான் உண்டான
ஆசைகள உள்ளார பூட்டி
வச்சி திண்டாடி நிக்கிறேனே
இக்கரையில

ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல

பெண் : அட சாயங்காலம்
ஆன பின்னும் சந்தை மூடி
போன பின்னும் வீடு போயி
சேர்ந்திடத்தான் தோணல

Tags: Chinna Thayee, Chinna Thayee Songs Lyrics, Chinna Thayee Lyrics, Chinna Thayee Lyrics in Tamil, Chinna Thayee Tamil Lyrics, சின்ன தாயி, சின்ன தாயி பாடல் வரிகள், சின்ன தாயி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *