கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு பாடல் வரிகள்

Movie Tamizhariyum Perumal
படம் தமிழறியும் பெருமாள்
Music B.R.Rejin
Lyricist Udumalai Narayanakavi
Singers         V. A. Chellappa and
P. A. Periyanayaki
Year 1942
ஆண் : ஆராரோ ஆரி ஆராரோ
சீராரும் மாதவ ஸ்ருங்காரமேனி
ஆராரோ ஆரி ஆராரோ
சீராரும் மாதவ ஸ்ருங்காரமேனி
போற்றிடும் பூங்கோதை
போலிந்த புவிமேல் நீ
பொன்னே யென் அன்பேகொண்ட
பொன்காய்க்கும் தருவே நான்
புகழுமாம் பொன் காய்க்கும் தருவே
போதே செம்பொன்னூஞ்சல் மீதாடும் பூவாய்
 
ஆண் : கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு
கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு
மிகும் அன்பு கொண்டென்னோடுறவாடும்
மிகும் அன்பு கொண்டென்னோடுறவாடும்
கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு
 
பெண் : தனியாய் நானாட தரைமேல் நீ வாட
தனியாய் நானாட தரைமேல் நீ வாட
தகுமா நன்னேசம் தருமா சந்தோஷம்
தகுமா நன்னேசம் தருமா சந்தோஷம்
 
ஆண் : மனம்போலவே உந்தன் மனம் போலவே
 
இருவர் : ஊஞ்சல் விளையாடலாம்
வாஞ்சையாக
ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக
மென்மேலுமன்பு நீடும் சீராக
மென்மேலுமன்பு நீடும் சீராக
ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக
 
பெண் : பூப்பட்டுச் சேலை புதுவேட்டி பூண்டு
பூப்பட்டுச் சேலை புதுவேட்டி பூண்டு
மாப்பிள்ளை பொண்ணுமே வைத்தாடலாமா
மாப்பிள்ளை பொண்ணுமே வைத்தாடலாமா
 
ஆண் : மாப்பிள்ளை நான் நீ
 
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
மாப்பிள்ளை பொண்ணுமே வைத்தாடலாமா
 
ஆண் : சமயோசிதம் அது சமயோசிதம்
 
இருவர் : ஊஞ்சல் விளையாடலாம்
வாஞ்சையாக
ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக
மென்மேலுமன்பு நீடும் சீராக
மென்மேலுமன்பு நீடும் சீராக
ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *