அந்த வானத்த போல பாடல் வரிகள்

Movie Name  Chinna Gounder
திரைப்பட பெயர் சின்ன கவுண்டர்
Music Ilayaraja
Lyricist R.V. Udhaya Kumar
Singer Ilayaraja
Year 1992

ஆண் : அந்த வானத்தப்
போல மனம் படைச்ச
மன்னவனே பனித்துளியப்
போல குணம் படைச்ச
தென்னவனே

ஆண் : மஞ்சளிலே ஒரு
நூலெடுத்து விண்ணுக்கும்
மண்ணுக்கும் சம்மந்தம்
உண்டுன்னு சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

ஆண் : அந்த வானத்தப்
போல மனம் படைச்ச
மன்னவனே பனித்துளியப்
போல குணம் படைச்ச
தென்னவனே

ஆண் : மாறிப் போன
போதும் இது தேரு
போகும் வீதி வாரி
வாரித் தூற்றும் இனி
யாரு உனக்கு நாதி

ஆண் : பாசம் வைத்த
தாலே நீ பயிரைக் காத்த
வேலி பயிரைக் காத்த
போதும் வீண் பழியைச்
சுமந்த நீதி

ஆண் : சாமி வந்து
கேட்டிடுமா வீண்
பழியைத் தீர்த்திடுமா

ஆண் : விண்ணுக்கும்
மண்ணுக்கும் சம்மந்தம்
உண்டுன்னு சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

ஆண் : அந்த வானத்தப்
போல மனம் படைச்ச
மன்னவனே பனித்துளியப்
போல குணம் படைச்ச
தென்னவனே

ஆண் : நெஞ்சம் என்னும்
கூடு அதில் நெருப்பு
வைத்ததாரு துன்பம் வந்த
போதும் அதைத்
துடைப்பதிங்கு யாரு

ஆண் : கலங்கும் போது
சேறு அது தெளியும்
போது நீரு கடவுள்
போட்ட கோடு அதைத்
திருத்தப் போவதாரு

ஆண் : வெந்த புண்ணும்
ஆறிடுமா வேதனை தான்
தீர்ந்திடுமா

ஆண் : விண்ணுக்கும்
மண்ணுக்கும் சம்மந்தம்
உண்டுன்னு சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

ஆண் : அந்த வானத்தப்
போல மனம் படைச்ச
மன்னவனே பனித்துளியப்
போல குணம் படைச்ச
தென்னவனே

ஆண் : மஞ்சளிலே ஒரு
நூலெடுத்து விண்ணுக்கும்
மண்ணுக்கும் சம்மந்தம்
உண்டுன்னு சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

ஆண் : அந்த வானத்தப்
போல மனம் படைச்ச
மன்னவனே பனித்துளியப்
போல குணம் படைச்ச
தென்னவனே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Chinna Gounder, Chinna Gounder Songs Lyrics, Chinna Gounder Lyrics, Chinna Gounder Lyrics in Tamil, Chinna Gounder Tamil Lyrics, சின்ன கவுண்டர், சின்ன கவுண்டர் பாடல் வரிகள், சின்ன கவுண்டர் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *