ராசாவே உன்னை நம்பி பாடல் வரிகள்
Movie Name  Muthal Mariyathai
திரைப்பட பெயர் முதல் மரியாதை
Music Ilayaraja
Lyricist Vairamuthu
Singer S. Janaki
Year 1985

பெண் : ஆஆ..அ..அ
ஆஆ..அ..அ
ஆஆ…ஆஆ…ஆஆ..ஆ

பெண் : ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க

பெண் : வந்து சொல்லாத உறவை
இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா
தண்ணீரில் எழுத்தா

பெண் : ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

பெண் : பழசை மறக்கலையே
பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு
ஊரு சனம் கும்மி அடிக்குது

பெண் : அடடா எனக்காக
அருமை கொறஞ்சீக
தரும மகராசா
தலைய கவுந்தீக

பெண் : களங்கம் வந்தால் என்ன பாரு
அதுக்கும் நிலான்னு தான் பேரு
அட மந்தையிலே நின்னாலும் நீ
வீரபாண்டி தேரு

பெண் : ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க

பெண் : காதுல நரைச்ச முடி
கன்னத்துல குத்துது குத்துது
சுழியில படகு போல
என் மனசு சுத்துது சுத்துது

பெண் : பருவம் தெரியாம
மழையும் பொழிஞ்சாச்சு
வெவரம் தெரியாம
மனசும் நனைஞ்சாச்சு

பெண் : உனக்கே வச்சிருக்கேன் மூச்சு
எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சு
ஊருக்குள்ளே பேச்சு

பெண் : ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க

பெண் : வந்து சொல்லாத உறவை
இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா
தண்ணீரில் எழுத்தா

பெண் : ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

Tags: Muthal MariyathaiMuthal Mariyathai Songs LyricsMuthal Mariyathai Lyrics, Muthal Mariyathai Lyrics in TamilMuthal Mariyathai Tamil Lyricsமுதல் மரியாதை, முதல் மரியாதை பாடல் வரிகள், முதல் மரியாதை வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *