அடி ஆத்தாடி பாடல் வரிகள்

Movie Name  Kadalora Kavithaigal
திரைப்பட பெயர் கடலோர கவிதைகள்
Music Ilayaraja
Lyricist Vairamuthu
Singer Ilayaraja and S. Janaki
Year 1986

பெண் : அடி ஆத்தாடி……..
அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப்
பறக்குது சரிதானா..
பெண் : அடி அம்மாடி..
குழு : ஒரு அலை வந்து மனசில
அடிக்குது அதுதானா..

ஆண் : உயிரோடு…
பெண் : உறவாடும்
ஆண் : ஒருகோடி ஆனந்தம்..
பெண் : இவன் மேகம் ஆக…
யாரோ காரணம்..
ஆண் : ஆஆஆ…….

ஆண் : அடி ஆத்தாடி…
இளமனசொன்னு இறக்கை கட்டிப்
பறக்குது சரிதானா..
அடி அம்மாடி..

பெண் : மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..

ஆண் : இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை..
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..

பெண் : கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ..
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
இசை கேட்டாயோ…ஓஓஓ….ம்ம்ம்ம்…

பெண் : லலலலலா…லலலலல….
லலலல லலா…லலல லா லலல லா
லலலலல….லலலலல….லலலலல….

ஆண் : தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்..
உண்மை சொல்லு பெண்ணே என்னை
என்ன செய்ய உத்தேசம்..

பெண் : வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன..
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன..

ஆண் : கட்டுத்தறி காளை நானே
கன்னுக்குட்டி ஆனேனே..
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப் போனேனே..
சொல் பொன்மானே…ஏஏஏ…..

பெண் : அடி ஆத்தாடி……..
அடி ஆத்தாடி…
குழு : இளமனசொன்னு இறக்கை கட்டிப்
பறக்குது சரிதானா..
பெண் : அடி அம்மாடி..
குழு : ஒரு அலை வந்து மனசில
அடிக்குது அதுதானா..

ஆண் : உயிரோடு…
பெண் : உறவாடும்
ஆண் : ஒருகோடி ஆனந்தம்..
பெண் : இவன் மேகம் ஆக…
யாரோ காரணம்..
ஆண் : ம்ம்ம்ம்……..

ஆண் : அடி ஆத்தாடி…
இளமனசொன்னு இறக்கை கட்டிப்
பறக்குது சரிதானா..
அடி ஆத்தாடி..

Tags: Kadalora Kavithaigal, Kadalora Kavithaigal Songs Lyrics, Kadalora Kavithaigal Lyrics, Kadalora Kavithaigal Lyrics in Tamil, Kadalora Kavithaigal Tamil Lyrics, கடலோர கவிதைகள், கடலோர கவிதைகள் பாடல் வரிகள், கடலோர கவிதைகள் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *