மலரோடு மலரிங்கு பாடல் வரிகள்

Movie Name  Bombay
திரைப்பட பெயர் பம்பாய்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Anuradha Sriram
Year 1995

பெண் : மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று
பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம்
ஓயட்டும் தேசம் மலர்
மீது துயில் கொள்ளட்டும்

பெண் : மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று
பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம்
ஓயட்டும் தேசம் மலர்
மீது துயில் கொள்ளட்டும்

குழு : வழிகின்ற கண்ணீரில்
இனம் இல்லையே உதிரத்தின்
நிறம் இங்கு வேறில்லையே
வழிகின்ற கண்ணீரில் இனம்
இல்லையே உதிரத்தின் நிறம்
இங்கு வேறில்லையே காற்றுக்கு
திசை இல்லை தேசம் இல்லை

பெண் : மனதோடு
மனம் சேரட்டும்

குழு : மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று
பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம்
ஓயட்டும் தேசம் மலர்
மீது துயில் கொள்ளட்டும்

குழு : துளி எல்லாம் கை
கோர்த்து கடல் ஆகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகள் எல்லாம் ஒன்றாகி
மலை ஆகட்டும் விண்ணோடு
விண் சேரட்டும் விடியாத
இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்

Tags: Bombay, Bombay Songs Lyrics, Bombay Lyrics, Bombay Lyrics in Tamil, Bombay Tamil Lyrics, பம்பாய், பம்பாய் பாடல் வரிகள், பம்பாய் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *