ஆலங்காலங்குருவி பாடல் வரிகள்

Movie Pulikkuthi Pandi
படம் புலிக்குத்தி பாண்டி
Music N. R. Raghunanthan
Lyrics Mani Amudhan
Singers         Lijesh Kumar,
Vandana Srinivasan
Year 2021
ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி

ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி

கொட்ட கொட்ட பாக்குறியே
கொண்டையத்தான் ஆட்டுறியே
கிட்ட கிட்ட வந்து நீயும்
என்ன கொல்லுறியே

நிக்க வெச்சு பாக்குறியே
நீயும் என்ன கேக்குறியே
கண்ணாலதான் ஜாட காட்டி
என்ன கொல்லுறியே

காத்த விட யாக்கை
எடை குறைஞ்சி போச்சி
நேத்து விட வாழ்க்கை
இப்ப இனிப்பா ஆச்சி

ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி

உன் கூட பேசுறேன்
உன்ன பத்தி பேசுறேன்
வேறேதும் தெரியல
இப்ப ஒன்னும் புரியல

உன் கூட நடக்குறேன்
உன்ன சுத்தி நடக்குறேன்
வேறேதும் தோனல
இப்ப நானும் நான் இல்ல

எத்தனை எத்தனை நட்சத்திரம்
எண்ணி தானே பாக்கனுமே
கற்பனை கற்பனை செஞ்சதெல்லாம்
வாழ்ந்த காட்டுன்னுமே

அழகா படைச்சி கொடுத்தேன் உயிரே
அதுதான் வரமும் கொடுக்கும் உறவே

ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி

………………………

எந்த பக்கம் தொட்டாலும்
கற்கண்டு இனிக்குமே
அது போல உன் நெனப்பு
நெஞ்சுக்குள்ள இருக்குமே

என்ன நீ சொன்னாலும்
கேக்கனும்னு தோணுமே
என்ன சொல்ல இந்த பந்தம்
ஆயிசுக்கும் வேணுமே

நெஞ்சுல நெஞ்சுல உள்ளதெல்லாம்
கண்ணுல கண்ணுளல நான் படிப்பேன்
என்னிடம் வந்து நீ கேட்கும் முன்னே
அது கையுல நான் கொடுப்பேன்

நெசமா வாழ்க்கை அழகா இருக்கு
நிழலா இருப்பேன் இனி நான் உனக்கு

ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி

கொட்ட கொட்ட பாக்குறியே
கொண்டையத்தான் ஆட்டுறியே
கண்ணாலதான் ஜாட காட்டி
என்ன கொல்லுறியே

காத்த விட யாக்கை
எடை குறைஞ்சி போச்சி
நேத்து விட வாழ்க்கை
இப்ப இனிப்பா ஆச்சி

ஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *