வைகறையில் வைகைக்கரையில் பாடல் வரிகள் 

Movie Name  Payanangal Mudivathillai
திரைப்பட பெயர் பயணங்கள் முடிவதில்லை
Music Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer S. P. Balasubrahmanyam
Year 1982

ஆண் : வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

ஆண் : உன் நினைவே எனக்கோர் சுருதி
உன் கனவே எனக்கோர் கிருதி
உன் உணர்வில் மனமே உருகி
வாடுதம்மா மலர்போல் கருகி
பலபல ஜென்மம் நானெடுப்பேன்
பாடல்கள் கோடி நான் படிப்பேன்
அன்பே உனக்கே காத்திருப்பேன்
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ……ஆஅ….

ஆண் : வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

ஆண் : ஆயிரம் ஆயிரம் ஆசைகளை
ஆசையில் உன்னிடம் பேச வந்தேன்
ஆவியில் மேவிய சேதிகளை
கேளென நெஞ்சிடம் கூற வந்தேன்

ஆண் : நினைவுகள் எங்கோ அலைகிறதே
கனவுகள் ஏனோ கலைகிறதே
நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ……ஆஅ….

ஆண் : வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் அருகில்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Payanangal Mudivathillai, Payanangal Mudivathillai Songs Lyrics, Payanangal Mudivathillai Lyrics, Payanangal Mudivathillai Lyrics in Tamil, Payanangal Mudivathillai Tamil Lyrics, பயணங்கள் முடிவதில்லை, பயணங்கள் முடிவதில்லை பாடல் வரிகள், பயணங்கள் முடிவதில்லை வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *