பொல்லாதபூமி பொலிப்போடும் பாடல் வரிகள்

Movie Asuran
படம் அசுரன்
Music G. V. Prakash Kumar
Lyrics Yugabharathi
Singers         Dhanush,
G. V. Prakash Kumar
Year 2019

பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள
முன்னால போனா நறுக்காதோ கால
அன்போட நின்னா தல வணங்கும் ஊரு
ஆவேசம் ஆனா உயிரெடுக்கும் பாரு

வீராப்புத்தான் வேணாம்மய்யா
வீட்டோட இரு நீ தொணையாக
சூலாயுதம் நீ தூக்குனா
வில்லங்கம் வருமே வெனையாக

உன் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து

உன் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து

ஆகாசமா நின்னா நம
அண்ணாந்து பாக்கும் ஜில்லாவே
அப்பாவியா தள்ளாடுனா
மல்லாந்து போவோம் மண்ணாவே

ஓட்டாண்டியா ஆனாலுமே
உள்ளூர வேணும் ஒரு தில்லு
ஏமாத்துற ஆள எல்லாம்
என்கூட மோத வர சொல்லு

யார் மேல யார் கீழ போடாத ரூலு
போராட எண்ணாட்டி மாறாதே நாளு
குத்தீட்டி மேல பாஞ்சாலும்
கொய்யால கீழ சாஞ்சாலும்
வெத்தான ஆளா நானும்
ஆக மாட்டேன் மூச்சே போனாலும்


ஹேய் பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள
முன்னால போனா நறுக்காதோ கால

கட்டாரியும் கோடாளியும்
கையேந்தும் வாழ்வ மாத்தாதோ
பச்சோந்தியா வாழாத
உன் தன்மானம் ஊர காக்காதோ

மண்வாசனை உன்மேலத்தான்
மக்காம வீசும் குடிகொண்டு
உன் பேருல பத்தூரையும்
பட்டாவ போடும் கவர்ன்மெண்ட்

ஆத்தாடி என் மவன் தானே
அசகாய சூரன்
காட்டேரி வந்தாலும்
கலங்காத வீரன்

கொம்பேறி மூக்கன் உன் கூட்டு
கூட்டாவே சேரும் என் பாட்டு
கும்மாளாம் போட நானும்
சேர்ந்தே வாரேன் ஒகே ஆல் ரைட்

உன் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து

உன் மீச முறுக்கால
கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க
வரலாற மாத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *