வானத்து முழுமதியோ பாடல் வரிகள்
| Movie | Kanniyin Kathali | ||
|---|---|---|---|
| படம் | கன்னியின் காதலி | ||
| Music | S. M. Subbaih Naidu | ||
| Lyricist | Kannadasan | ||
| Singers | Trichy Loganathan | ||
| Year | 1949 | ||
பெண் : வானத்து முழுமதியோ
மாநிலத்து ஊர்வசியோ
மதி மயக்கும் கற்பனையோ
கற்பனையின் முடிவுரையோ…..
பெண் : சித்திரப் பாவையம்மா
சித்திரப் பாவையம்மா……
ஆஅ…..ஆஆஅ…..ஆ….
சித்திரப் பாவையம்மா
உன் முகம் சீதக் கமலம்மா நீயே…..
சித்திரப் பாவையம்மா
உன் முகம் சீதக் கமலம்மா நீயே…..
பெண் : முத்து வரிசையென்றால் பற்களை
முத்து வரிசையென்றால்
அம்மா முல்லை வாடி வருந்தாதோ
முல்லை வாடி வருந்தாதோ அம்மா நீயே…..
பெண் : பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே
பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே
பழித்திடும் உன் அங்கமெல்லாம்
பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே
பழித்திடும் உன் அங்கமெல்லாம்
பெண் : சித்திரப் பாவையம்மா
………………………..
சித்திரப் பாவையம்மா
இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film). |
