யார் அழைப்பது யார் அழைப்பது பாடல் வரிகள்

Movie Maara
படம் மாறா
Music M. Ghibran
Lyrics Thamarai
Singers         Sid Sriram
Year 2021
யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது

போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது

உடலின் நரம்புகள்
ஊஞ்சல் கயிறு ஆகுமா ராரோ
உயிரை பரவசமாக்கி
இசைக்குமா ஆரிரோ ராரோ

மழை விடாது வர அடாதி
தொட தேகம் நனையும்
மனம் உலாவி வர அலாதி
இடம் தேடும் ஓஹோ


யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது

சேரும் வரை போகும் இடம் தெரியாதனில்
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா
பாதி வரை கேக்கும் கதை முடியாதனில்
மீதி கதை தேடாமல் யார் சொல்லுவார்

கலைவார் அவரெல்லாம் தொலைவார்
வசனம் தவறு அலைவார் அவர்தானே அடைவார்
அவர் அடையும் புதையல் பெரிது
அடங்காத நாடோடி காற்றல்லவா

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
காதருகினில் காதருகினில்
ஏன் ஒலிக்குது

போ என அதை தான் துரத்திட
வாய் மறுக்குது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது

பயணம் நிகழ்கிற பாதை முழுதும்
மேடையாய் மாறும்
எவரும் அறிமுகம் இல்லை எனினும்
நாடகம் ஓடும்

விடை இல்லாத பல வினாவும்
எழ தேடல் தொடங்கும்
விலை இல்லாத ஒரு வினோத
சுகம் தோன்றும் ஓ

யார் அழைப்பது யார் அழைப்பது
யார் குரல் இது
குரலின் விரலை பிடித்து
தொடரத்தான் துடிக்குது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *