ஒரு நாடிது என்றாலும் பாடல் வரிகள்

Movie Maanaadu
படம் மாநாடு
Music Yuvan Shankar Raja
Lyricist Arivu
Singers         Yuvan Shankar Raja
Year 2021
ஆண் : ஒரு நாடிது என்றாலும்
பல நாடுகளின் கூடு
சிறுபான்மைகள் இல்லாமல்
பெரும்பான்மைகள் இங்கேது
 
ஆண் : நதி நீரது நில்லாது
அணையா தடை சொல்லாது
மத மேகங்கள் இங்கேது
பொதுவானது நம் நாடு
 
ஆண் : ஜனநாயகம் இல்லாது
நம் தாயகம் வெல்லாது
இரு நாணயத்தின் பக்கம்
அரணாக மொழி நிக்கும்
 
ஆண் : அட ஹிந்து முஸ்லிம் கிறிஸ்து
நம்ம பூர்வகுடி பர்ஸ்டு
அட வந்ததம்மா ட்விஸ்டு
நம்ம சந்ததிக்கே ஸ்ட்ரெஸ்
 
ஆண் : நீ வேறாய் நானும் வேறாய்… வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்… பேராய்
யாராரோ ஆண்டு கொள்ள… கொள்ள
வீராதி வீரம் சொல்ல… சொல்ல
 
ஆண் : ஆகாயம் ஏறும் காலம்… காலம்
ஆனாலும் ஊரின் ஓரம்… ஓரம்
ஏராளம் கோடி பேர்கள்… பேர்கள்
சேராமல் வாழும் கோலம்… கோலம்
 
ஆண் : மதமாய விட்டா தான்
சமுதாயம் முன்னேறும்
அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னாவோம்
சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே சண்ட வராது
 
ஆண் : கிழக்குல அடிச்சா
அது வலிக்கலையே வடக்குக்கு
சரித்திரம் படிச்சா
அதில் எடமில்லையே மதத்துக்கு
கடவுள படைச்சு
சட சடங்கைஎல்லாம் நடத்திட்டு
மனுஷன வெறுத்த
அது வரம் தருமா ஜனத்துக்கு
 
ஆண் : நீ வேறாய் நானும் வேறாய்
நாம் ஆனோம் நான்கு பேராய்
யாராரோ ஆண்டு கொள்ள
வீராதி வீரம் சொல்ல
 
ஆண் : ஆகாயம் ஏறும் காலம்
ஆனாலும் ஊரின் ஓரம்
ஏறலாம் கோடி பேர்கள்
சேராமல் வாழும் கோலம்
 
ஆண் : மதமாய விட்டா தான்
சமுதாயம் முன்னேறும்
அடையாளம் பாக்காம எல்லாம் ஒன்னவோம்
சிறுபான்மை இல்லாம பெரும்பான்மை வாழாது
சம நீதி தந்தாலே சண்ட வராது

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *