ஏய் தென்றலே பாடல் வரிகள்
| Movie Name | Nenjathai Killathe |
|---|---|
| திரைப்பட பெயர் | நெஞ்சத்தை கிள்ளாதே |
| Music | Ilayaraja |
| Lyricist | Gangai Amaran |
| Singer | P. Susheela |
| Year | 1980 |
குழு : ……………………………………..
பெண் : ஏ தென்றலே
இனி நானும் பாடவா
என் வாழ்வெல்லாம்
சுபா மாலை போடவா
இளமை கவிதை
மனதில் இனிமை
பாடவே நீ வா
பெண் : ஏ தென்றலே
இனி நானும் பாடவா
பெண் : வாழ்வென்பதே ஆராதனை
வாழ் நாளெல்லாம் உன் தேவதை
நினைத்தே சிறு நெஞ்சமே
நிதமும் நலமே
நிழல் போல் உன்னை சேருவேன்
வளரும் சுகமே
இனிமேல் இனிமை இனி ஏன் தனிமை
பெண் : ஏ தென்றலே
இனி நானும் பாடவா
பெண் : தென் காற்றிலே சங்கீதமே
என் நெஞ்சிலே உன் பாவமே
தினமும் ஜதி போடுதே
அதில் ஓர் சுகமே
சிரிக்கும் மனமீதிலே
தெரியும் முகமே
ரசித்தேன் அழகை ரசிக்கும் மனதை
பெண் : ஏ தென்றலே
இனி நானும் பாடவா
என் வாழ்வெல்லாம்
சுபா மாலை போடவா
இளமை கவிதை
மனதில் இனிமை
பாடவே நீ வா
பெண் : ஏ தென்றலே
இனி நானும் பாடவா
